Wednesday, June 8, 2016

கோகோ கோலா பாட்டிலால் குழப்பத்துக்கு உள்ளான ஒரு இனம்



கோக் மாறும் பெப்சி பானங்களில் நச்சுத் தன்மை உள்ளது என்று கூறிப் பல போராட்ங்கள் தற்பொழுது நடந்து வரும் காலகட்டத்தில் , அந்த பாட்டிலால் மிகப் பெரும் குழப்பத்திற்கும் கலகத்திற்கும் ஒரு இனம் ஆட்பட்டது என்பதனை நம்ப முடிகின்றதா ?

1980ல் வெளிவந்து உலகம் முழுதும் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்ற படம் Gods must be crazy. தென்னாப்பிரிக்க நாட்டுப் படமான இது 100 மில்லியன் டாலர் வசூலைக் குவித்தது.

கதை :
பரபரப்பாக இருக்கும் நகரத்தின் 600 மைலுக்கு அப்பால் மிக மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பழங்குடி மக்களைப் பற்றிய கதை. மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மக்களிடைய ஆகாயத்தில் இருந்து ஒரு விமானி தூக்கி எறிந்த கோகோ கோலா பாட்டில் வந்து விழுகின்றது. இதற்கு முன்பு அப்படி ஒரு பொருளினைக் கண்டிராத அவர்கள் அதனை கடவுள் தங்களுக்கு தந்ததாக நம்புகின்றனர். அதனை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒரே  ஒரு பாட்டில் மட்டுமே இருப்பதால் அதனை ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாட முயற்சிக்கின்றனர்.இதனால் ஒற்றுமையாக இருந்த இவ்வினக் குழுவில் சண்டை ஏற்படுகின்றது. பிரச்சனைக்குரிய பொருளான இந்த கோகோ கோலா பாட்டிலினைக் கடவுளிடமே கொடுக்க முடிவு செய்து அந்தக் குழுவின் தலைவன் உலகின் எல்லைக்கு செல்கிறான்.


இங்கிருத்து தான் படம் தொடங்குகின்றது , அவன் பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள் பற்றி மட்டுமல்லாமல் , நகரத்தில் இருந்து கிராமம் நோக்கி வந்த ஒரு இளம் பெண் மற்றும் காட்டில் ஆராய்ச்சி செய்ய வந்த ஒருவர் இவர்கள் இருவரிடையான காதல் என சுவாரசியமாக செல்லும்.

இந்தப் படம் tamilyogi என்ற இணையதளத்தில் தமிழ் பதிப்பில் (tamil dubbed ) இருக்கின்றது . மிக நகைச்சுவையானப் படம் , உங்கள் குழந்தைகளுடன் கண்டு களியுங்கள்.

இந்தப் படத்தின் மையமான பழங்குடியினத் தலைவனாக நடித்தவரின் நிலை தான் சற்று பரிதாபகரமானது. ஆரம்பத்தில் சொன்னது போல 100 மில்லியன்இந்த திரைப்படம்  வசூலித்திருந்தாலும் இவருக்குக் கிடைத்தது மிகவும் சொற்ப தொகையான 2000$ மட்டுமே, அவருக்கும் பணத்தின் மதிப்பு தெரியாததினால்  மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்றுக் கொண்டார். பின்னர் தான் இவருக்கு பணத்தின் மதிப்பு புரிய ஆரம்பித்தது,அந்த சமயத்தில் பணம் சம்பாதிக்கும் வழி இல்லை . அவர் சாகும் தருவாயில் பட நிறுவனம் 20,000$ வழங்கியது(ரூ.10 லட்சம் ).

பெப்சி கோக் குறித்து  நான் முன்பு எழுதிய இந்தப் பதிவினையும் படியுங்கள்.

நன்றி 
செங்கதிரோன்  

No comments: