Sunday, April 15, 2018

நம் குரு நலம்பெற வேண்டும்



பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியத்தலைவர் குரு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வட மாவட்டத்தின் சிறந்த அரசியல் தலைவர்களில் அவருக்கு ஒரு முக்கிய இடமுண்டு . மேடைகளில் ஆவேசமிக்க பேச்சகளால் கட்சியினர் அவரை மாவீரன் எனக் கொண்டாடுகின்றனர். தான் சார்ந்த சமூகம் மட்டுமன்றி அனைவருமே நலமுடன் வாழவேண்டும் என்ற நல்லுள்ளம் படைத்தவர் . 

அவர் மீது பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் இருப்பினும் ,அவர்  தான் கொண்ட கருத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். முன்னாள் எம்பி மருத்துவர் செந்தில் , குரு அவர்களைப் பற்றி எழுதிய குறிப்பில் நாம் அறியாத பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளார் . அதில் இருந்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி, பலரும் நம்பிக்கொண்டிருக்கும் கருத்தான , குரு தலித் மக்களுக்கு எதிரானவர் என்ற பிம்பமே பொய்யானது . ஏனெனில் இரட்டைக் குவளை முறையை ஒழிக்க பாடுபட்டிருக்கின்றார். அது மட்டுமன்றி மிக மிக முற்போக்காக சிந்திப்பவர், அது குறித்த புத்தகங்களை தேடி படிக்கும் ஆர்வம் உடையவர் . மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நிகழும் நம் நாட்டில் அதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டவர். 

நம் குரு நலம் பெற்று மீண்டு வந்து நீடுழி வாழ்வேண்டும் 

நன்றி 

செங்கதிரோன்

No comments: