Friday, April 27, 2018

BMW பெரிய மனிதர்கள்;


ஆடி கார் ஐஸ்வர்யா தொடங்கி சல்மான் வரை விலை உயர்ந்த கார் வைத்திருப்பவர்களால் பல்வேறு உயிர் சேதமும் பொருள் சேதமும் உண்டாகி இருக்கின்றது. இதனாலேயே நம்மூரில் BMW ,ஆடி  கார்களில் செல்பவர்களைப் பார்த்தாலே பயமும் வெறுப்பும் தான் சாதரண மனிதர்களுக்கு உள்ளது .

அதுவும் டெல்லி போன்ற பெரு நகரங்களில் நிலைமை மிகவும் மோசம். விலையுயர்ந்த கார்களில் செல்பவர்களை மற்ற கார்கள் முந்தி செல்ல முயன்றால் அதே இடத்தில் தடுத்து நிறுத்தி அடி கொடுப்பார்கள் , சில சமயம் உயிரையே எடுப்பப்ர்கள் என்று என் நன்பர்கள் சொன்னர்கள்.

ஆனால் இதற்கு மாறாக வெளிநாட்டில் இது போன்ற  விலையுயர்ந்த கார்களில் செல்பவர்கள் மிகுந்த அமைதியானவர்களாகவும் , நல்லுள்ளம் படைத்தவர்களாகவும் இருக்கின்றனர். எனக்கு ஏற்பட்ட அனுபவங்களே இதற்கு சிறந்த சாட்சி . நான் ஒரு முறை என்னுடைய காரில் சென்று கொண்டிருந்தபோது புத்த்ம் புதிய BMW என் பின்னால் வந்து கொண்டிருந்தது . நான் வேகத்தை குறைத்து அதற்கு வழி விட்டாலும் முந்தாமல் என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தது . நெடுஞ்சாலையில் நான் வந்த பின்னர் சிக்னலில் என் பக்கத்தில் வந்து நின்று கண்ணாடியை இறக்கி, உங்கள் கார் டிக்கி திறந்துள்ளது என்று சொல்லி விட்டு சென்றார். 


மற்றோரு சம்பவத்தில் காபி கடையிலிருந்து செல்லும் போது காரை மிக மெதுவாக ரிவர்ஸ் எடுத்தேன் அப்போது பக்கத்தில் ஆடி காரில் வந்து இறங்கிய பெண் , எனக்காக நின்று காரை மிக சரியாக ரிவர்ஸ் எடுக்க உதவினார்.

இந்த இரு சம்பவங்கள் மட்டுமன்றி நான் பார்த்தவரையில் நெடுஞ்சாலையில் செல்லும் இது போன்ற விலையுயர்ந்த கார்காரர்கள் எந்த வித தொந்தரவும் மற்றவர்களுக்கு செய்வதில்லை. இருப்பினும் இங்கும் பணக்கார பெரியோர்களின் பிள்ளைகள் பல்வேறு சேஷ்டைகளை விழாக்காலங்களில் செய்வதுண்டு . குறிப்பாக முட்டை ,தக்காளி போன்றவற்றை குடியேறிகள் (immigrants )மீது எறிவதுண்டு.

நம் ஊரில் சட்டம் சரியாக இல்லாததாலும் , முறை தவறி பணம் சம்பாதிப்பவர்கள் இருப்பதாலும் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெருகின்றன.

BMW ,ஆடி கார் வைத்திருப்பவர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல.என்றென்றால் விரைவில் நானும் BMW வாங்க உத்தேசித்துள்ளேன்.

நன்றி 
செங்கதிரோன் 

No comments: