Monday, March 2, 2020

கார் தீ : விண்டர் விநோதங்கள்

நம்மூரில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் போது ஏசி கார் வைத்திருப்பவர்கள் வீட்டில்தூங்காமல் காரில் தூங்குவார்கள். இதனால் பல விபரீதங்கள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.இதே போன்றதொரு நிகழ்வு கனடாவில் சமீபத்தில் நடந்தது .ஆனால் அது துன்பியல் சம்பவமா அல்லது துணிவான சம்பவமா என்பதை இந்த பதிவை படிக்கும் நீங்க தான் முடிவு செய்ய வேண்டும்.

கனடா போன்ற குளிர் பிரதேசங்களில் காருக்குள் அவரு மிதமான வெப்பம் (heating system) இருப்பது இன்றியமையாத ஒன்று. . பெரும்பாலான கார்களில் seat ஹீட்டர் என்றொரு வசதி கூட உண்டு . குளிரின் அளவு சில சமயங்களில் -20 முதல் -40 அளவுக்கு கூட செல்லும். அச்சமயங்களில் உடல் முழுக்க விறைத்துப் போகும். காருக்குள் வெப்பம் போதுமான அளவு இருந்தால் தான் பயணம் சிறப்பாக இருக்கும்.
காலையில் வேலைக்கு கிளம்பும் முன் முதல் வேலையாக காரில் heater on செய்து காரில் மேல் படிந்திருக்கும் பனி முழுவதையும் அகற்றி விட்டு 15-30 நிமிடங்களுக்கு பிறகு தான் காரை ஓட்ட முடியம். 

நீண்ட நேரம் பணியில் இருந்த காருக்குள் சென்றால் Fridgeக்குள் சென்று அமர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். புதிய தொழில்நுட்பம் வந்து விட்டதால் வீட்டுக்குள்ளிருதே காருக்குள் ஹீட்டர் on செய்ய முடியும். இதனால் காருக்குள் வெப்பம் போதுமான அளவுக்கு இருப்பதோடு மட்டுமல்லாமல் , காரின் மேல் படிந்துள்ள பனியினை (snow) எளிதாக அகற்ற முடியும்.


இந்த இடம் தான் திரில்லிங்கான இடம் , தைரியமா மேல படியுங்கள் :
கனடாவில் உள்ள மக்கள்தொகை மிக மிக குறைவாக உள்ள ஒரு மாநிலமான யூகான்(Yukon ) பகுதியில் இரவு நேரப்பயணத்தினை மூவர் மேற்கொண்டனர். நன்றாக அமைந்த பயணத்தில் திடீரென கார் பழுதாகிவிட்டது. வெளியிலோ -50 டிகிரி குளிர் ( நம்மூரில் வெப்பநிலை எப்பொழுதும் +35 அல்லது அதற்கு அதிகம் இருக்கும்). மிக முக்கியமாக அவர்களை இருந்த இடத்தில் செல்போன் சிக்னல் இல்லாதததால் அவரச உதவிக்கு 911 கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

காருக்குள்ளும் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க முடியாது .வெளியே சென்றால் பனியில் விறைத்து செத்துப்போகவும் வாய்ப்பிருக்கிறது. காரை விட்டு வெளியில் வந்த அவர்கள் உயிர் பிழைக்க என்ன வழி என்று யோசித்தார்கள் . குளிரை சமாளிக்க வெப்பம் தேவை , எனவே ….இந்த இரவு நேரத்தில் கொட்டும் பனியில் எந்த ஒரு பொருளையும் எரித்து குளிர் காய முடியாது . அவர்கள் கண்ணில் எரிக்கக்கூடிய பொருளாக தெரிந்தது அவர்கள் பயணம் செய்த கார் மட்டுமே , உயிரின் மதிப்பை விட காரின் மதிப்பு பெரிதாக தெரியாததால் ஒரு மனதாக முடிவு செய்து காரை உடைத்து எரித்து குளிர் காய்ந்து உயிர் பிழைத்தனர். காலையில் அந்த வழியாக வந்த ஒருவர் இவர்களை மீது மருத்துவமனையில் சேர்த்தனர்.

கனடா முழுவதும் இந்த செய்தி மிகப்பெரும் பேசுபொருளானது. காவல்துறை நீண்ட நேரப்பயணம் மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீண்டும் அறிவுறுத்தினர்.

காட்டை வித்து கள்ளு குடித்தது , சுனாமியில் ஸ்விம்மிங்போட்டது போன்ற நம்முடைய பெருமைகளையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக அமைந்துவிட்டது காரை எரித்து குளிர் காய்ந்த விவகாரம். 
செங்கதிரோன்

No comments: