Tuesday, April 21, 2015

சிட்டுக் குருவி லேகியத்தின் சூட்சுமம்


உலக சிட்டுக் குருவிகளின் நாளில் இந்த ரகசியத்தினை ஒரு சித்த மருத்துவராக உலகுக்கு சொல்ல வேண்டிய கடைமை இருக்கின்றது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூவி கூவி விற்கப்படும் சிட்டுக் குருவி லேகியத்திற்கும் சித்த மருத்துவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நான் அறிந்த வரையில் எந்த ஒரு குறிப்புகளும் சித்தார்களால் எழுதப்படவில்லை.



சிட்டுக் குருவி லேகியம் என்பது சிட்டுக் குருவியின் இறைச்சி கொண்டு செய்யப்படுவது இல்லை. இன்ப உணர்வைத் (காம ) தூண்டக் கூடிய லேகியத்தினை நேரடியாகக் குறிப்பிட்டு போது இடத்தில் விற்கும் போது வரும் சங்கடத்தினைப் போக்கவே ,அதற்கு சிட்டுக் குருவி லேகியம் என்று பெயர் வைத்தனர். இருப்பினும் குறிப்பாக சிட்டுக் குருவியின் பெயரை அந்த லேகியத்திற்கு சூட்டக் காரணம் ,சிட்டுக் குருவியின் மிதமிஞ்சிய காதல் உணர்வுக் கொண்டப் பறவை என்பது தான்.எனவே மக்களுக்கு இந்த லேகியம் விற்கும் போது சிட்டுக் கிஉறுவியின் பேயரை ஒருக் குறியீடாகத் தான் பயன்படுத்தி வந்து இருக்கின்றனர்.

No comments: