Showing posts with label cinema. Show all posts
Showing posts with label cinema. Show all posts

Friday, May 6, 2016

திருவள்ளுவர் குறிப்பிட்ட வடிவழகிகளை எப்பொழுது திரையில் காண்போம்?



பள்ளிப் பருவத்தில் திருக்குறளின் முதல் இரண்டு பாகங்களை  கடமைக்குப் படித்த நாம் வயது வந்த பிறகு மூனறாம் பாகத்தை மிக ஆர்வமாகப் படிக்கின்றோம். பாலியல் கல்வியின் அவசியத்தினை பன்நெடுங்காலத்திற்கு முன்பே உணர்ந்து அதற்கென ஒரு அத்தியாயத்தினை எழுதி வைத்தவர் தான் திருவள்ளுவர்.

வள்ளுவர் எழுதியக் கீழ்க்கண்ட குறளில்  பெண்ணை வடிவழகி என்று வர்ணிக்கின்றார். முதலில் இந்தக் குறளையும் , அதன் பொருளையும் படியுங்கள்.
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

திருவள்ளுவரின் காலம் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது . அக்காலத்திலேயே நம் பெண்கள் மிக அழகாகவும் நல்ல வடிவாகவும் இருந்திருக்க வேண்டும். அதனாலயே தான் திருவள்ளுவர் அதனை தன் நூலில் வடிவான அழகி என்று வர்ணித்துள்ளார்.



தற்பொழுது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது திருமணம் செய்ய இருக்கும் ஆண்கள் அனைவரும்  தங்களுக்கு தமன்னா போல பெண் வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர். வெளிமாநில நடிகைகளின் வருகைக்குப் பின்னர் நம் தமிழ்ப் பெண்களை கேவலமாகப் பார்க்கும் சூழல் அதிகமாகி விட்டது.


இந்த மயக்கம் நமக்கு மட்டும் தான் என்பதனை உங்களுக்கு உதாரணத்துடன்  கூறுகின்றேன்.

நான் ஸ்பெயின் நாட்டில் வசித்தபொழுது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் ரிபப்ளிக் நாட்டைச் சேர்ந்த நண்பனுடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்த பொழுது எதிரில்  அவன் நாட்டை சேர்ந்த ஒரு கறுப்பினப் பெண் வந்தாள். உடனே இவன் மிக உற்சாகமாகி அந்தப் பெண்ணின் அழகை வர்ணிக்க ஆரம்பித்து விட்டான்.அழகிகளின் தேசமான ஸ்பெயினில் இருந்து கொண்டு இவன் ஏன் இந்தக் கறுப்பினப் பெண்ணை ரசிக்கின்றான் என்று எனக்குத் தோன்றியது. மேலும் அதே நேரத்தில் ஒரு தமிழ் பெண் வந்திருந்தால் கண்டிப்பாக நம் கவனம் அங்கே திரும்பாது .ஏனென்றால் வெள்ளை தான் அழகு என்றும் வெளிநாட்டுப் பெண்கள் தான் பேரழகிகள் என்றும் நம் ஆழ்மனதில் பதிந்து விட்டது.  மேலும் மற்ற நாடுகளில் நம் நாட்டைப் போன்று உள்ளூர் அழகிகளை உதாசினப்படுத்தி விட்டு மற்ற தேசத்து அழகிகளை கொண்டாடும் அவல நிலை இல்லை. அதனால் தான அவர்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் தங்கள் நாட்டுப் பெண்களின் அழகைப் போற்றி மகிழ்கின்றனர்.

இயக்குனர்களும் கதாநாயகர்களும் வெளிமாநில நடிகைகளையே தெரிவு செய்து படத்தின் கதையையும் கெடுத்து, நம் ரசனையையும் கெடுக்கின்றனர். திரைத்துரையில் இருந்து கொண்டே இதற்காக குரல் கொடுத்தவர் மாதவன் ஒருவர் மட்டுமே , அவர் தமிழ் தெரிந்த நடிகைகளை நடிக்க வையுங்கள் அப்பொழுதுதான் அந்தப் படத்தின் கதை புரிந்து நடிகையின் ஈடுபாடு சரியாக இருக்கும் என்று கூறினார்.

ஆனால் இங்கோ குழந்தை நட்சத்திரம் முதல் அம்மா வேடம் வரை அனைத்திற்குமே வெள்ளை நிறத்தை அளவுகோலாக வைத்தே தேர்வு செய்கின்றனர்.


உலகில் தலை சிறந்த சினிமாவான ஈரானிய சினிமா முதல் ஐரோப்பிய சினிமா வரை அனைத்திற்கும் அம்மண் சார்ந்த மக்களையே தேர்ந்தேடுப்பதனால் தான் அவை மிக சிறப்பான ஒன்றாக விளங்கி வருகின்றன.

தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதனால்  தமிழில் அனைவரும் பெயர் வைப்பதைப் போல , தமிழ் மக்களை நடிக்க வைத்தால் மேலும் பல சலுகைகள் என்று அரசாங்கம் அறிவித்தால் இந்த நிலைமை மாறும் என்றே நினைக்கின்றேன்.சமீபத்தில் கூட ஒரு  தமிழ் நடிகை இது குறித்து தன் ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.

இனியாவது நம் தமிழகத்தில் உள்ள பெண்களை வடிவழகிகளாகவும் பேரழிகிகளாகவும் பாருங்கள்.

பின் குறிப்பு: இந்த வடிவழகி என்ற பெயர் மட்டும் இன்றுவரை இருந்து வருகின்றது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் லேப்ட்டினன்ட்டாக இருந்தவரின் பெயர் வடிவழகி.

அது மட்டுமன்றி வெள்ளனூர் வடிவழகி அம்மன் என்று ஒரு தெய்வத்திற்கும் இந்தப் பெயர் இருக்கின்றது. 

உங்கள் காதலியையோ அல்லது மனைவியையோ  வர்ணிக்க வேண்டுமென்றால் திருக்குறளில் உள்ள காமத்துப் பாலைப் படியுங்கள்.


நன்றி 
செங்கதிரோன்


Monday, December 31, 2012

சாரு ,ஜாக்கி ,விஜயகாந்த்: மூவேந்தர்கள்


இந்த  மூவேந்தர்களுக்கும் என்ன ஒற்றுமை என்பதனை எழுத்துலகம் ,பதிவுலகம் ,அரசியல் இதனை ஓரளவுக்கேனும் கவனித்து வருபவர்களுக்கு சட்டென்று புரிந்துவிடும் .உங்கள் அனைவரின் ஊகம் மிகச் சரியானதே, அதாங்க மூன்று  பெரும் தாங்கள் மிகப்  பெரிய  தண்ணி வண்டி என்று அடிக்கடி வாக்குமூலம் கொடுக்கும் மேதைகள்.ஆனாலும்  இதனையும் தாண்டி நிறைய ஒற்றுமைகள் உள்ளன.முதலிலேயே சொல்லிவிடுகின்றேன் இந்தப் பதிவின் நோக்கம் இந்த மூவரையும் இழிவுப் படுத்தும் நோக்கம் அல்ல,அவர்களின் நிறை குறைகளை அவர்களின் முன்னாள் ரசிகன் என்ற முறையில் அலசும் பதிவு.



சாரு :முதலில் சாருவை குறிப்பிட்டதற்கான காரணமே அவரின் சிறந்த ஆளுமைத்திறன் தான் முக்கியக் காரணம்.இந்த மூன்று பேரில் இவரே முதன்மையானவர் என்பதனை மூவரையும் தொடர்ந்து கவனித்து  வருபவர்கள் தயக்கமின்றி ஒப்புக்கொள்வார்கள். தொடர்ந்து சர்ச்சைக்குரிய  செயல்களை   எழுதியும் பேசியும் செய்தும் வந்ததால் மிகக் கடுமையான் கண்டனத்துக்கு ஆளானார் .இருப்பினும் இவரின் ஒளிவு மறைவற்ற  எழுத்துக்கு இன்றும் ஆண் வாசகர்களை மட்டுமின்றி பெண் வாசகர்களை மிக ஏராளமாகக் கொண்டிருப்பவர் .அதுவும் இவரிடம் உள்ள தன்னனம்பிக்கையும் மிகப் பெரிய சாதனைகளை செய்ய வேண்டும் என்ற துடிப்பும் என்னை எப்பொழுது வியக்க வைக்கும்.இவரின் எழுத்துக்களை தொடர்ந்து படிக்கும் அனைவருக்குமே தாங்களும் தங்கள் துறைகளில்  இதனைப் போன்ற சாதனைகள் புரிய வேண்டும்  என்ற எண்ணம் நிச்சயம்  ஏற்படும். உலக இலக்கியங்கள் மட்டுமின்றி உலக  இசை குறித்த இவரின் விசாலமானப் பார்வையினை தமிழகத்தில்  இவரளவுக்கு பெற்றிருப்பவர்கள் கண்டிப்பாக வெகுச்  சிலரே இருப்பர் . நிறைகள் அளவுக்கு குறைகளையும் அதிகம் பெற்றிருப்பதுதான் மிக வருத்தமான உண்மை. மொத்தத்தில் ஒரே வரியில் சொல்வதானால்  'எடுப்பார் கைபிள்ளை' என்று சொல்லி விடலாம். தான் பழகும் அனைவரயும் மிக எளிதில் நம்பி இவர்  ஏமாந்து போன கதைகள் மிக ஏராளம்.மனுஷ்,மிஷ்கின் போன்றவர்களை பற்றி இவர் மிக உயர்வாக எழுதியதைப் போன்று இனி ஒருவர் எழுத வேண்டுமானால் அவர் பிறந்தது தான் வர வேண்டும் அந்த அளவுக்கு மிக உயர்வாக எழுதினார் .




விஜயகாந்த் : கருப்பு எம்.ஜி.ஆர்  என்று தனக்குத் தானே பட்டம் சூட்டி  தமிழ்கத்தினை வலம்  வருபவர். இவரின் திடீர் எழுச்சி அரசியலில் யாருமே எதிர்பாராதது .ஆனாலும் கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு இவரின் ரசிகர்களின் பலம் மிகத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். பொங்கல்,தீபாவளியில் இவரின்  படம் வெளிவருகையில் மிகப் பெரிய பேனர்களை பேருந்தில் எடுத்துக் கொண்டு காலையிலே திரையரங்கத்துக்கு சென்றுவிடுவர் .ரஜினி,கமல் படத்திற்கு  இணையான வரவேற்பினை தங்கள்  தலைவனுக்கும் வழங்குவதனை கடமையாக் கொண்டிருந்தனர். கார்த்திக் மற்றும் பிரபு இருவருமே விஜயகாந்தை விட அதிகமான வெற்றி  படங்களை  கொடுத்திருந்தாலும் அவர்களால் பெற முடியாத அளவுக்கான ரசிகர் பட்டாளத்தினை தன வசம் வைத்திருந்தார்.ரஜினி சொல்லும் 'இது தானாக சேர்ந்த கூட்டம்' என்ற  சொல் விஜயகாந்த் ரசிகர்களுக்கு  தான் மிகப்  பொருத்தமான வசனம்.தனது ரசிகர்கள் பலத்தினை மிக சரியான நேரத்தில் அரசியல் சக்தியாக மாற்றி அதில் வெற்றியும் அடைந்த்ருக்கின்றார். இருப்பினும் அவரின் உயரிய லட்சியமான முதலமச்சர் பதவியை அவர் அடைவது எந்தளவுக்கு சாத்தியம் எனபது அவரின் முன்கோபத்தினை மட்டுமே பொறுத்தது. அந்தளவுக்கு  பொது இடங்களில்  தன் பொறுமையிழந்து தன்னை சுற்றி இருப்பவர்களை இம்சிப்பதில் இவருக்கு நிகர் இவரே. 



ஜாக்கி.: உலகபடம் என்ற வார்த்தைக்கு தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த ஒரே அர்த்தம் ஜாக்கி தான். அந்தளவுக்கு  பல நாட்டு திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியத்தில் முதன்மையானவர்.பதிவுலகத்தில் சூப்பர் ஸ்டார் என்றால் அது மிகை அல்ல ஏனென்றால் மெத்தப் படித்தவர்கள் முதற்கொண்டு ஓரளவுக்குப் படித்தவர்கள் வரை  அனைவரையுமே  வாசகர்களாகக் கொண்டிருக்கும் ஒரே பதிவர் இவர் தான்.இவன் நம்மில் ஒருவன் என்று நினைக்கும் அளவுக்கான ஒரு அடையாளத்தினை இயலபாகவே ஏற்படுத்திக் கொண்டவர்.இவரின் தாக்கத்தினால் பதிவெழுத ஆரம்பித்தவர்களும் ,இவரின் பாணியைப்  பின்பற்றி பதிவெழுதி வருபவர்களும் ஏராளம். எந்த உலகப் படங்களால் மிகப் பெரிய உயரத்தினை  தொட்டாரோ  அவற்றினை தொடராமல் சமூக பிரச்சனைகள் குறித்து எழுத ஆரம்பித்தில் இருந்து இவருக்கான தனிப்பட்ட பிரச்சனைகள் தொடர ஆரம்பித்தன.சிறிது காலம் கால்ஷீட் போன கதாநாயகன் போல கவனிக்கப்படாமல் இருந்தாலும் மறுபடியும் மீண்டு வந்து கொண்டிருக்கின்றார்.


நன்றி 
செங்கதிரோன் 



மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் அனைத்துமே இவர்கள் மூவரையும் நன்கு அறிந்தவர்களுக்கு மிகவும் உடன்பாடாகவே இருக்கும் மிகைப்படுத்தி எதுவும் எழுதப்படவில்லை   என்பது புரியும். மற்றவர்கள் இதனை எனது தனிப்பட்ட கருத்தாகவே எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி 
செங்கதிரோன்